"சரி என்னை எவ்ளோ லவ் பண்ற சொல்லு... சின்சியரா லவ் பண்றியா.." 'ரவுடி' பேபியுடன் காவலர் பேசிய ரொமான்டிக் ஆடியோ

x
  • கொலை வழக்கில் தொடர்புடைய பெண்ணுடன் உளவுத்துறையில் பணியாற்றும் காவலர் ஆபாசமாக பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அருகே ஊராட்சி வார்டு உறுப்பினரும், திமுக வார்டு செயலாளராகவும் இருந்த சதீஷ் என்பவர், கடந்த சில மாதங்களுக்கு முன் முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
  • இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், குன்றத்தூரைச் சேர்ந்த திமுக முன்னாள் ஒன்றிய பிரதிநிதி எஸ்தர் என்கிற யோகேஸ்வரி கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் உள்ளார்.
  • இவருடன் சோமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஐ.எஸ். உளவுப் பிரிவைச் சேர்ந்த காவலர் மாதவன் என்பவர், செல்போனில் ஆபாசமாக பேசிக்கொள்ளும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • அதில், கொலை, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரௌடி சச்சினை யாராலும் பிடிக்க முடியாது என்று மாதவன் பேசுவதும், மாதவனுடன் எஸ்தர் கொஞ்சி பேசுவதும் இடம்பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்