இந்திய எல்லைக்குள் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் - 6 பேர் கைது... இந்திய கடலோர காவல் படை நடவடிக்கை

x
  • இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரை கைது செய்த இந்தியப் படையினர், அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர்.
  • இந்திய பெருங்கடல் பகுதியில், ஆதேஸ் என்ற ரோந்து கப்பலில், இந்திய கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
  • அப்போது, இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த 6 மீனவர்களைக் கைது செய்தனர்.
  • மேலும், அவர்களின் மீன்பிடிப் படகையும் பறிமுதல் செய்தனர்.
  • கைது செய்யப்பட்ட மீனவர்கள் 6 பேரும், தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம் கடற்கரைக்கு கொண்டுவரப்பட இருப்பதாக கடலோர காவல் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்