இலங்கை அகதி ராஜனை சிறப்புமுகாமுக்கு மாற்றும் விவகாரம் - தமிழ்நாடு அரசுக்கு கெடு விதித்த உச்சநீதிமன்றம்

x
  • இலங்கை அகதி ராஜனை சிறப்பு முகாமுக்கு மாற்ற தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் 24 மணி கெடு விதித்துள்ளது.
  • கொலை குற்றத்துக்காக தண்டனை பெற்று 35 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ள இலங்கை அகதி ராஜன், தன்னை முன் கூட்டியே விடுவிக்க கோரிய மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நிறைவேற்றப்பட்டு விட்டதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
  • இதற்கு மனுதாரர் தரப்பில் உத்தரவு நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
  • தமிழ்நாடு அரசின் சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நீதிபதிகள் 24 மணி நேரத்துக்குள் சிறப்பு முகாமுக்கு ராஜனை மாற்ற வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என தெரிவித்தனர்.
  • இலங்கை அகதி ராஜன் முன் விடுதலை குறித்து மீண்டும் பரிசீலிக்க தமிழ்நாடு அரசுக்கு மூன்று வாரம் அவகாசம் அளித்து விசாரணையை ஏப்ரல் 17 - ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.

Next Story

மேலும் செய்திகள்