இலங்கை முன்னாள் அமைச்சர் அமெரிக்கா தப்பி செல்ல முயற்சி..! விமானநிலையத்தில் பரபரப்பு | Srilanka

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கையில் இருந்து வெளியேற முயற்சித்த போதும், அது பயனளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
x

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கையில் இருந்து வெளியேற முயற்சித்த போதும், அது பயனளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை அவர், வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றபோது, அவரின் ஆவணங்களை பரீட்சிப்பதற்கு குடிவரவுத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

இதன்போது குடிவரவு அதிகாரிகள், தமது கடமைகளை புறக்கணித்தமையை அடுத்து, பசில் ராஜபக்ச மீண்டும் நாட்டுக்குள் திரும்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் சாதாரண பயணிகள் சகிதம் செல்ல அனுமதியளிக்கப்பட்டபோதும் , அங்கிருந்த பயணிகள் அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள முடியாமல் அதிகாலை வரை காத்திருந்து விமான நிலையத்திலிருந்து வெளியேறினார்.


Next Story

மேலும் செய்திகள்