இலங்கை தமிழர் பாரம்பரிய உணவகம் - திறந்து வைத்த திமுக எம்பி கனிமொழி

x

இலங்கை தமிழர் பாரம்பரிய உணவகம் - திறந்து வைத்த திமுக எம்பி கனிமொழி


தூத்துக்குடியில் இலங்கை தமிழர் பாரம்பரிய உணவகத்தை திமுக எம்பி கனிமொழி திறந்து வைத்தார். இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தூத்துக்குடி மட்டகடை அருகே மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் ஓலைப்புட்டு என்ற தலைப்பில் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தை திமுக எம்பி கனிமொழி திறந்து வைத்து, இலங்கை தமிழர்களின் பாரம்பரிய உணவுப் பொருட்களான ஓலைப்புட்டு, குழல் புட்டு, துகல், மீன் ரோல், சிக்கன் ரோல், சுசியம், பனங்கா பனியாரம் உள்ளிட்டவற்றை ரசித்து உண்டு மகிழ்ந்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், எப்போதும் சுத்தமான, சுவையான, சுகாதாரமான உணவு வகைகளை மட்டும் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்