விபத்திற்குள்ளான ஸ்பைஸ் ஜெட் விமானம்...காயமடைந்த பயணி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

x

விபத்திற்குள்ளான ஸ்பைஸ் ஜெட் விமானம்...காயமடைந்த பயணி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு | Spice Jet

கடந்த மே மாதம் தரையிறங்கும்போது விபத்திற்குள்ளான ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பயணித்த பயணி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மே 1ம் தேதி மாலை 5.13 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்ட எஸ்ஜி 945 என்ற விமானம் இரவு 7.15 மணியளவில் துர்காபூர் விமான நிலையத்தில் இறங்கும் போது விபத்திற்குள்ளானது.

இதில் 17 பேர் படுகாயம் அடைந்தனர். ஜார்கண்டைச் சேர்ந்த 48 வயதான அகமது அன்சாரியும் முதுகுத் தண்டில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் மாதம் 26ம் தேதி உயிரிழந்ததாக தற்போது வெளியாகியுள்ள அவரது இறப்பு சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்