"பேரப்பசங்களா..என்கிட்ட வாங்க டா.." வயசு பசங்களுக்கு வலை வீசும் சீனா.. கவர்ச்சி அறிவிப்புக்கு பின் காத்திருக்கும் அதிர்ச்சி

x
  • பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த தம்பதியர் ஒருவர் ஒரு குழந்தை மட்டுமே என்று அனுமதித்து வந்த சீனா... தற்போது மூன்று குழந்தைகள் வரை பெற்று கொள்ளுங்கள் என தனது நாட்டு மக்களிடம் கெஞ்சி வருகிறது.
  • இதற்காக பல்வேறு கவர்ச்சிகர திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன சிச்சுவான் மாகாண அரசு, சீன இளைஞர்கள் திருமணம் செய்யாமலே குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று கூட அறிவித்திருந்தது. ஆனால், இப்படி பல முயற்சிகளை கையில் எடுத்தும்... மக்கள் தொகையை அதிகரிக்க முடியாமல் திணறி வருகிறது...
  • சீனாவை பொறுத்தவரை 61 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மக்கள் தொகையில் பெரும் சரிவை சந்தித்துள்ளது.
  • சீனாவில் கடந்த ஆண்டு புதிதாக பிறந்தவர்களை விட உயிரிழந்தவர்களே அதிகம்.
  • குறிப்பாக இளைஞர்கள் பலரும் திருமணத்தை தள்ளிப் போடுவதாலும், கருவுறுதல் விகிதம் வீழ்ச்சி அடைந்து வருவதாலும்...
  • குழந்தையின்மை அதிகரித்து வருகிறது.
  • இதனால் தற்போது விந்தணு தானம் செய்ய முன்வருமாறு கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றன...
  • சீன மாகாணங்கள். குழந்தை இல்லாத தம்பதிகளின் குழந்தை கனவை நிறைவேற்றி வைப்பது தான் விந்தணு தானம்.
  • அதுவும் சீன இளைஞர்களிடையே கடந்த 15 ஆண்டுகளில் விந்து தரம் குறைந்துவிட்ட நிலையில், விந்தணு தானம் செய்வதற்கு உடல் ரீதியாகவும்...
  • உளவியல் ரீதியாவும் தயாராக இருப்பவர்களை வலை வீசி தேடி வருகின்றன... விந்தணு வங்கிகள்.
  • அதுவும் ஆரோக்கியமான... எவ்வித மரபணு நோய் பாதிப்புகளும் இல்லாத 20 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கு விந்தணு தானம் செய்ய வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  • ஷான்சி, யுனான், ஷான்டாங்... ஜியான்சி, ஹைனான், உள்ளிட்ட பல்வேறு மாகணங்களில் உள்ள விந்தணு வங்கிகள் அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
  • தானமாக பெறப்படும் விந்தணுக்களை சேமித்து வைக்கவும் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளன.
  • இப்படி விந்தணு தானம் செய்ய முன்வருபவர்களுக்கு 60 ஆயிரம் முதல் 85 ஆயிரம் வரை மானியமாக வழங்கப்படும் என்றும் சீன அரசு தெரிவித்துள்ளது.
  • ஒரு காலத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய சீனா...
  • இன்று அதே மக்கள் தொகையை அதிகரிக்க படாதபாடு பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்