அதிவேகத்தில் வந்த கார்..எதிரே வந்த லாரி மீது பாய்ந்த பயங்கரம் - நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி

x

ஆம்பூர் அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, கண்டெய்னர் லாரி மீது மோதியதில், லாரி ஓட்டுநர் படுகாயமடைந்தார். பெங்களூரை சேர்ந்த நரசிம்மன் என்பவர் தனது குடும்பத்துடன், காஞ்சிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். ஆம்பூர் சான்றோர்குப்பத்தில் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், தடுப்பு கம்பிகள் மீது பாய்ந்து, எதிரில் வந்த கண்டெய்னர் லாரி மோதியது. இதில், கண்டெய்னர் லாரி ஓட்டுநர் வினோத் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிசிடிவியில் பதிவான விபத்து காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்