கண்கொள்ளா காட்சி...! ஐயப்பன் சன்னிதானத்தில் நடனம் ஆடிய சிறுமிகள்.. சபரிமலையில் சுவாரஸ்யம்...

x

சபரிமலை ஐயப்பன் கோவிலில், சிறுமிகள் ஆடிய திருவாதிரை நடனத்தைக் கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர். சபரிமலையில் மகர விளக்கு பூஜை வரும் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலமணி நேரம் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். சன்னிதானத்தில் பக்தர்கள் காத்திருக்கும் நடைப்பந்தல் அருகே உள்ள கலையரங்கில் சிறுமிகளின் திருவாதிரை நடன நிகழ்ச்சி நடந்தது. ஐயப்பனை தரிசிக்க வந்த பக்தர்கள், சிறுமிகளின் நடனத்தைப் பார்த்து பரவசம் அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்