பொங்கல் பண்டிகை - இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

x

பொங்கல் திருநாளையொட்டி சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்வோரின் வசதிக்காக, சிறப்பு பேருந்துகளின் இயக்கம் இன்று முதல் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி, சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக இன்று முதல் 14-ந்தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சென்னையிலிருந்து தினமும் இயக்கப்படும் 2 ஆயிரத்து100 பேருந்துகளுடன், 3 நாட்களுக்கு கூடுதலாக, 4 ஆயிரத்து 449 சிறப்பு பேருந்துகளும், தமிழகத்தின் மற்ற முக்கிய நகரங்களில் இருந்து 6 ஆயிரத்து183 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.


Next Story

மேலும் செய்திகள்