சுயரூபத்தை காட்டிய தென்மேற்கு பருவமழை.. மும்பையை பதம் பார்த்த மழை வெள்ளம் - அடித்துச்செல்லப்பட்ட நபர்..மூழ்கிய வாகனங்கள்

x

மும்பையில் நேற்று நள்ளிரவு முதல் பெய்த தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று முதல் மும்பை நகரில் கனமழை பெய்ய தொடங்கியது. கொட்டித்தீர்த்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடானது. ஒருசில இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்த‌தால் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனிடையே, கழிவு நீர் கால்வாயில் விழுந்து 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திடீர் மழையால் முன்பையில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்