"இந்த வருசம் இப்படியொரு அதிசயமா?" - சென்னை மாநகராட்சியை பாராட்டிய தெற்கு ரயில்வே

x

எழும்பூர் ரயில்நிலைய தண்டவாளங்களில் மழைநீர் தேங்காதபடி நடவடிக்கை எடுத்த சென்னை மாநகராட்சிக்கு தெற்கு ரயில்வே பாராட்டு தெரிவித்துள்ளது.

சென்னை ரயில்வே கோட்ட மேலாளர், மாநகராட்சிக்கு நன்றி தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், சென்னை மாநகராட்சி- ரயில்வே துறையின் ஒரு வருட கூட்டு முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மழைநீர் தேங்காதபடி மேற்கொண்ட நடவடிக்கையால், வழக்கமான வேகத்தில் ரயில்கள் சீராக இயக்கப்படுவதாக கோட்ட மேலாளர் பதிவிட்டுள்ளார். இதேபோன்று மற்ற ரயில் நிலையங்களிலும் இணைந்து செயல்பட்டால் வரும் காலத்தில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்காமல் மக்களுக்கு ரயில் சேவையை வழங்க இயலும் என அந்த பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்