தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்..களமிறங்கிய தேசிய பேரிடர் மீட்புக் குழு | Kerala

x

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வதற்காக, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையில் இருந்து 25 பேர் கொண்ட 7 குழுக்கள் கேரளா விரைந்துள்ளன. நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள் பொருத்திய வாகனங்களில் ரப்பர் படகு, மரம் வெட்டும் கருவிகள், பாதுகாப்பு உபகரணங்கள் உடன் துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் தலைமையிலான வீரர்கள் பத்தனம்திட்டா, ஆழப்புழா, இடுக்கி, கோழிக்கோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்