ரிசர்வ் வங்கி மண்டல அலுவலகத்தில் குடியரசு தின விழா, தேசிய கொடி ஏற்றி வைத்தார் தென் மண்டல இயக்குநர்

சென்னை ராஜாஜிசாலையில் இயங்கி வரும் ரிசர்வ் வங்கி மண்டல அலுவலகத்தில் குடியரசு தின விழாக் கொண்டாடப்பட்டது. ரிசர்வ் வங்கியின் தென் மண்டல இயக்குனர் எஸ்.எம்.என்.சுவாமி தேசியக் கொடியை ஏற்றி காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய தென் மண்டல இயக்குநர் சுவாமி, பத்து ரூபா நாணயங்களை பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து துறை வாங்குவது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருவதாக கூறினார். 

X

Thanthi TV
www.thanthitv.com