தெற்காசிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடர்..போட்டியின் நடுவே கைகலப்பு..களத்தில் மோதிக்கொண்ட வீரர்கள்

x

தெற்காசிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முதல் பாதி முடியும் தருணத்தில், லைனில் பந்தை பாஸ் செய்ய முயன்ற பாகிஸ்தான் வீரர் அப்துல்லாவிடம் இருந்து, இந்திய அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் பந்தை பறித்தார். இதனால் இரு அணி வீரர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நடுவர்கள் தலையிட்டு வீரர்களை சமாதானப்படுத்திய நிலையில், விதிகளை மீறி நடந்து கொண்டதாக இந்திய அணியின் பயிற்சியாளர் இகோருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டு போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதேபோல் பாகிஸ்தான் பயிற்சியாளர் அன்வருக்கு yellow கார்டு கொடுக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்