தினம் தினம் மகனின் கொடுமை...தாங்க முடியாத தந்தையின் கடைசி முடிவு - அதிர்ந்து போன போலீசார்

x

திட்டக்குடி அருகே கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில், மூத்த மகன் விநாயகம் வேலைக்கு செல்லாமல் மதுவுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தினமும் குடித்து விட்டு விநாயகம் தகராறு செய்ததாக கூறப்படும் நிலையில், சம்பவத்தன்றும் அதே போல் தகராறு செய்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த ஆறுமுகம் மகனை கத்தியால் குத்தி கொன்ற நிலையில், யாருக்கும் தெரிவிக்காமல் உடலை அடக்கம் செய்ய முயன்றுள்ளார். தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்