ஸ்மார்ட்போனால் தூக்கில் தொங்கிய பாஜக ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் மகன் - சென்னை அருகே அதிர்ச்சி

x

ஆவடியில் கல்லூரிக்கு செல்லாமல் போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்ததை தந்தை கண்டித்ததால், கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஊடகப்பிரிவின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் குருமூர்த்தி. தனியார் கல்லூரியில் பொறியியல் படித்து வந்த இவரது மகன் தினேஷ்குமார், கல்லூரிக்கு செல்லாமல் செல்போனில் கேம் விளையாடிபடி இருந்ததாக கூறப்படுகிறது. இதனை குருமூர்த்தி கண்டித்ததாக கூறப்படும் நிலையில், தினேஷ்குமார் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்