சொத்து தகராறில் நடந்த பயங்கரம்... தந்தையை கல்லால் அடித்தே கொன்ற மகன் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்

x

காரைக்குடியை சேர்ந்தவர் அடைக்கலம். கூலித் தொழிலாளியான இவர், இரண்டாவது மனைவி சிவகாமி வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டினுள் குந்த மர்ம நபர்கள், கல்லால் அடித்து அடைக்கலத்தை கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். இதனை தடுக்க முயன்ற, சிவகாமிக்கும் காயம் ஏற்ப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சிவகாமியிடம் நடத்திய விசாரணையில், அடைக்கலத்தின் முதல் மனைவியின் மகன் முருகேசன் மீது, சந்தேகம் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து முருகேசன் மற்றும் அவரது கூட்டாளி என இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், சொத்து தகராறு காரணமாக தந்தையை கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர். இதற்கு உடந்தையாக இருந்த மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்