தாயின் தகாத உறவால் அவமானத்தில் உயிரை மாய்த்து கொண்ட மகன்..கள்ளக்காதலனை வெட்டி கூறு போட்ட தாய்

x

புதுக்கோட்டை அருகே, திருமணத்தை மீறிய உறவு காரணமாக, ஆறு பேர் கொண்ட கும்பல், பட்டப்பகலில் இளைஞரை வெட்டி கொலை செய்தது.

அன்னவாசல் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்ற இளைஞருக்கும், நவம்பட்டியைச் சேர்ந்த ராசாத்தி என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், ராசாத்தியின் மகன் வெற்றிவேல், சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில், ராசாத்தி, அவரது கணவர் சண்முகம் மற்றும் உறவினர்கள் நான்கு பேர், முத்துக்குமாரை வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே முத்துக்குமார் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ராசாத்தி, சண்முகம் உள்பட ஏழு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்