தாய் திட்டியதால் மகன் தற்கொலை - அதிர்ச்சியில் தாய் செய்த பகீர் சம்பவம்

x

திருவண்ணாமலை அடுத்த அணைக்கரை பைபாஸ் சாலையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் ஜோதி. இவருடைய மகன் விஜய் என்கிற மனோஜ், படித்து முடித்து வேலை கிடைக்காத விரக்தியில் மதுவுக்கு அடிமையாகி இருந்தார். இந்நிலையில் வேலைக்குச் செல்லாமல் இருப்பது குறித்து மகனை ஜோதி திட்டியுள்ளார். இதனால் விரக்தி அடைந்த மனோஜ், வீட்டின் படுக்கை அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வீடு திரும்பிய ஜோதி, மகன் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, தானும் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார், இருவரின் உடல்களைக் கைப்பற்றி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்