மச்சி ஓடு.. ஓடு.. யாரோ துரத்துறாங்க.. - பவானிசாகர் சாலையில் சுவாரஸ்யம்

x

பவானிசாகர் நகர்ப் பகுதியில் முகாமிட்ட இரண்டு காட்டு யானைகளை, வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் நகர் பகுதியில் புகுந்த காட்டு யானைகள், அணை பூங்கா மற்றும் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் பயிற்சி பள்ளியின் காம்பவுண்ட் சுவர்களை சேதப்படுத்தின. இந்தநிலையில் பவானிசாகர் அணை அருகேயுள்ள சாலையில் இரண்டு காட்டு யானைகள் முகாமிட்டன. தகவலறிந்து விரைந்த வனத்துறையினர், சுமார் அரை மணி நேரம் போராடி இரண்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்