பாம்பை பரிசாக கொடுத்த போதை ஆசாமி... ஆத்திரத்தில் ஒரே போடாய் போட்ட கண்ணாடி விரியன்... | Snake

x

டலூரில் பாம்பை புத்தாண்டு பரிசாக கொடுத்தவர், அதே பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். சலவைத் தொழிலாளியான இவர், மது போதையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியே சென்ற பாம்பை பிடித்து அங்கிருந்தவர்களுக்கு புத்தாண்டு பரிசாக வழங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து தெறித்து ஓடினர். இதனிடையே, அந்த பாம்பு மணிகண்டனை கடித்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே அவருடன் வந்த கபிலன் என்பவர், பரிசாக வழங்கப்பட்ட பாம்பை பிரித்து பார்த்தபோது, அது கொடூர விஷம் கொண்ட கண்ணாடி விரியன் என்பது தெரியவந்தது. இந்நிலையில், அந்த பாம்பு அந்த நபரையும் தீண்டிய நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்