புஷ்பாவை போல் செம்மரம் கடத்தல்..வந்த ரகசிய தகவல்...அதிரடியாக கும்பலை தூக்கிய போலீஸ்

x

எர்ரவாரிப்பள்ளி வனப்பகுதியில் இருந்து செம்மரம் கடத்தி வருவதாக திருப்பதி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பெயரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, வேன் ஒன்றில் செம்மரக்கட்டைகள் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அதனை பறிமுதல் செய்த போலீசார், காரில் பின் தொடர்ந்து வந்த 9 பேரை கைது செய்தனர். இந்த ஒன்பது பேரும், தமிழகம், கேரளா, ஆந்திரா,கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். பறிமுதல் செய்யப்பட்ட 2 கோடி மதிப்பிலான ஆயிரத்து 358 கிலோ எடை கொண்ட 33 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று கார் ஒரு வேன் இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்