டிசைன் டிசைனா ஒளித்து வைக்கப்பட்ட தங்கம் ..தலைமறைவான கடத்தல்காரர்.. ஏர்போர்ட்டில் சிக்கியது எப்படி?

x
  • சென்னை விமான நிலையத்தில் ஆணையக ஊழியரிடம் இருந்து இரண்டு கிலோ 600 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
  • பாதுகாப்பு சோதனை பகுதியில் இருந்து சந்தேகத்துக்கிடமான முறையில் சென்ற விமான நிலைய ஆணையக ஊழியரிடம் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர்.
  • அதில், ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு கிலோ 600 கிராம் தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
  • அவற்றை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், இலங்கையில் இருந்து வந்த பயணி ஒருவர், அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க கடத்தல் தங்கத்தை ஊழியரிடம் கொடுத்தது தெரியவந்தது
  • . இதையடுத்து, விமான நிலைய ஊழியரை கைது செய்த அதிகாரிகள், தலைமறைவான இலங்கை பயணியை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்