"சென்னையில் சீரான தடையில்லா மின்சாரம் விநியோகம்" - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

x

சென்னையில் தடையின்றி சீராக மின்சாரம் விநியோகிக்கப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்... சென்னையில் அதிகபட்சமாக கடந்த 15ம் தேதி 3 ஆயிரத்து 991 மெகா வாட் மின்சாரம் தடையின்றி விநியோகிக்கப் பட்டுள்ளதாகவும், முன்னதாக கடந்த மாதம் 20ம் தேதி சென்னையின் மின் தேவை 3 ஆயிரத்து 778 மெகா வாட்டாக பதிவாகி இருந்த நிலையில், அதிகபட்ச நுகர்வு 213 மெகா வாட் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார். இதையடுத்து மின்சார தேவை அதிகரிப்பால் தடையில்லா சீரான மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்