தனது செல்ல நாய்க்குட்டிக்காக சைக்கிளில் குட்டி அறை... குட்டி நாய்க்கு ராஜ வாழ்க்கை கொடுத்த முதியவர்

x

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த முதியவர் ஒருவர் செல்லும் இடமெல்லாம் தனது சைக்கிளில் சகல வசதிகளையும் செய்து தனது நாய்க்குட்டியையும் அழைத்து செல்கிறார்.

பார்ப்பதற்குத் தான் இது பழைய சைக்கிள்... ஆனால் பக்கவாட்டில் ஒரு கூடை அமைத்து, அதில் தனது செல்ல நாயைப் படுக்க வைத்து, தாகத்திற்கு தண்ணீர் பாட்டில் கொடுத்து, போதாத குறைக்கு அதை வெயிலில் இருந்து காக்க மேலே துண்டு ஒன்றைப் போட்டு மூடி... ஒரு குட்டி இளவரசரை வளர்ப்பது போல் வளர்த்து வருகிறார்.

ராதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் சின்னதுரை... அட... ஏசி அறையில் கூட இப்படி ஒரு சுகமான தூக்கம் கிடைக்காதுப்பா என்பதைப் போல, தன்னை ஜம்மென்று பார்த்துக் கொள்ளும் தனது உரிமையாளரின் அன்பை எண்ணி அந்த குட்டி நாய் நிச்சயம் மனம் நெகிழ்ந்திருக்கும்...


Next Story

மேலும் செய்திகள்