விண்ணை தொடும் வழுக்கு மரம்.. சர சரவென ஏறி பரிசை தட்டிய இளசுகள்

x

திண்டுக்கல் அருகே கோயில் விழாவில், வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.

சாணார்பட்டி அடுத்துள்ள அஞ்சுகுழிப்பட்டியில் உள்ளது முத்தலாம்மன், காளியம்மன், பகவதியம்மன் இணைந்த கோவில். இங்கு கடந்த 26ம் தேதி தொடங்கி திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மரத்தில் ஏற ஏராளமான இளைஞர்கள் முயற்சித்தனர். இறுதியில் சந்தானம் என்பவர் உச்சி வரை சென்று, அங்கு கட்டப்பட்டிருந்த 501 ரூபாய் பரிசை தட்டிச் சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்