சீவலப்பேரி மாயாண்டி கொலை... சபாநாயகர் சமரச பேச்சால் முடிவுக்கு வந்த போராட்டம்.

x

நெல்லை மாவட்டம், சீவலப்பேரியில் படுகொலை செய்யப்பட்ட மாயாண்டியின் உடலை பெற்றுக் கொள்ள உறவினர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இதனால், 5 நாள்களாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வருகிறது.

சீவலப்பேரியில் கோயில் பிரச்னை தொடர்பாக, மாயாண்டி என்ற விவசாயி கடந்த 10-ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். அவருடைய உடலை வாங்க மறுத்து உறவினர்களும், ஆதரவாளர்களும் 5 -வது நாளாக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மாயாண்டியின் குடும்பத்தினருடன் சபாநாயகர் அப்பாவு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாயாண்டி மற்றும் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட பூசாரி சிதம்பரம் ஆகியோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்ததை அடுத்து, மாயாண்டியின் உடலை பெற்றுக் கொள்ள உறவினர்கள் சம்மதித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்