வேங்கைவயலை தொடர்ந்து அடுத்த கொடூரம்..? குடிநீர் தொட்டியில் கிடந்த நாயின் சடலம் உள்ளே தூக்கி போட்டது யார்..? - அதிர்ச்சியில் ஊர் மக்கள்

x

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேல்நிலை நீர்தேக்க தொட்டியில், இறந்த நாயை போட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

சிவகாசி ஒன்றியத்துக்குட்பட்ட புதுக்கோட்டை ஊராட்சியில், பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், 6 குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் கிராம மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வரப்படுகிறது

இந்நிலையில், இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்குள் இறந்த நாயின் சடலத்தை மர்ம நபர்கள் போட்டு சென்றதாக கூறப்படுகிறது

. இது தொடர்பாக மன நலம் பாதித்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்