மாநகராட்சி வாரிசு வேலை... போட்டி போட்ட குடும்பத்தால் ஏற்பட்ட விபரீதம்... சிவகாசியில் பரபரப்பு

x
  • சிவகாசி அருகே ஆயில் மில் காலனியை சேர்ந்த ரவி மாநகராட்சியில் துப்பரவு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.
  • கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இவர் உயிரிழந்த நிலையில் இவருக்கு ரதி லட்சுமி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.
  • இதனிடையே ரவியின் வாரிசு வேலைக்கு மனைவி ரதி லட்சுமி முயன்ற நிலையில் அதற்கு மாமியார் முருகேஸ்வரி எதிர்ப்பு தெரிவித்தார்.
  • அப்போது வாரிசு வேலையை பேரனுக்கு தர வேண்டும் என உறுதியாக இருக்கவே பிரச்சினை வெடித்திருக்கிறது. இதனால் கோபமடைந்த ரதிலட்சுமியின் சகோதரர் காளிராஜன், தகராறில் ஈடுபட்டதோடு முருகேஸ்வரி மற்றும் அவரின் சித்தி மகளான தமயந்தி கருப்பாயியை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
  • இருவரின் சடலங்களை மீட்ட போலீசார் சரணடைநந்த காளீஸ்வரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்