முத்துமாரியம்மன் கோயில் மண்டல பூஜை - முள் படுக்கையில் நடனமாடிய பெண் சாமியார்

x

திருப்புவனம் அருகே முத்துமாரியம்மன் கோயில் மண்டல பூஜையின் போது, பெண் சாமியார் ஒருவர் முள் படுக்கையில் ஆக்ரோசமாக நடனமாடி அருளாசி வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம் லாடனேந்தல் கிராமத்திலுள்ள பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயிலில், மண்டல பூஜை விழாவினையொட்டி சங்காபிஷேகம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து நாகராணி என்னும் பெண் சாமியார், முள் படுக்கையில் ஆக்ரோஷமாக நடனமாடி அருளாசி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்