கலெக்டர் வீட்டின் முன் கைக்குழந்தையுடன் இளைஞர் தீக்குளிக்க முயற்சி- சிவகங்கையில் பரபரப்பு

x
  • தான் வளர்க்கும் சண்டை சேவலை கேட்டு தன்னை தாக்குவதாக கூறி சிவங்கை ஆட்சியர் வீட்டின் முன்பு இளைஞர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • சிவகங்கையை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான மாரி என்பவர், சண்டை சேவல் ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.
  • இந்த சேவலை ஜிம் செந்தில் என்பவர், விலைக்கு கேட்டு வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் மாரியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
  • இதனால், விரக்தியடைந்த இளைஞர் தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வீட்டின் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • உடனே, பொதுமக்கள் மற்றும் போலீசார் இளைஞரை மீட்ட நிலையில், புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்