மானத்தை பறிக்கும் 'லவ் டுடே' கும்பல்.. அழாத குறையாக கதறும் பிரபல யூடியூபர்கள்

x
  • சமூக வலைதளங்களில் புகைப்படம் மற்றும் ரீல்ஸ் பதிவிடும் பெண்களின் முகத்தை மார்பிங் செய்து, ஆபாசமாக சித்தரித்த கும்பல், அதை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • லவ் டுடே படத்தில் நடந்த சம்பவத்தை போலவே நிஜத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியிருப்பது சிவகங்கையில்...
  • சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலையை சேர்ந்தவர் யூடியூபர் தயாளபிரபு... இவர் சமூக வலைதளங்களில் டிக் டாக் வீடியோ மூலம் பிரபலமானவர்.
  • இந்நிலையில் தயாளபிரபு மற்றும் அவர் மனைவியின் புகைப்படங்களை, ஈரோட்டை சேர்ந்த கும்பல் மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரித்து விடியோ வெளியிடுவதாக சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் தயாளபிரபு புகாரளித்துள்ளார்.
  • இந்த புகாரின் அடிப்படையில் சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில், ஈரோட்டை சேர்ந்த ஆட்டோ ரஞ்சித் என்பவரின் தலைமையிலான கும்பல் ஃபேக் ஐடிக்கள் மூலம் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து பணம் பறித்து வந்தது தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்