சிங்கப்பூர் to மதுரை இனி நேரடி.. சிங்கப்பூர் அமைச்சரிடம் முதல்வர் ஸ்டாலின் உறுதி

x

முதலீடுகளை ஈர்க்க அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்நாட்டு உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சண்முகத்தை சந்தித்து பேசினார். அப்போது, சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அவருக்கு அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின்போது பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடிய நிலையில், சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவையை தொடங்க வேண்டுமென, முதல்வர் ஸ்டாலினிடம், சிங்கப்பூர் அமைச்சர் கோரிக்கை விடுத்தார். அதற்கு முதல்வர் ஸ்டாலின், இது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அவரிடம் உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்