ஒரே நேரத்தில் 7 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம் | kuwait |

x

குவைத்தில் ஒரே நேரத்தில் 2 பெண்கள் உட்பட 7 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எத்தியோப்பியாவைச் சேர்ந்த பெண், குவைத்தைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் 3 ஆண்கள், சிரியா, பாகிஸ்தானைச் சேர்ந்த இருவர் என மொத்தம் 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், அதன்பிறகு தற்போதுதான் கூட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இந்த மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு ஐரோப்பிய யூனியன் உட்பட பல அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்