நிலச்சரிவு, சாலைத் துண்டிப்பால் சிக்கிய சிக்கிம்..அவதிப்படும் சுற்றுலாப் பயணிகள்

x

வடக்கு சிக்கிமில் உள்ள சுங்தாங்கில் நிலச்சரிவு மற்றும் சாலைத் துண்டிப்பால் 300 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவித்தனர். அவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர். காலை 11 மணி அளவில், 300 சுற்றுலாப் பயணிகளும் காங்டாக் நோக்கி நகர்வதற்கு ராணுவ வீரர்கள் உதவி செய்தனர். சுற்றுலாப் பயணிகளுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகளையும் ராணுவ வீரர்கள் செய்து கொடுத்தனர். மதியம் 12 மணிக்கு மேல், ஒருவர் மயங்கி விழுந்ததால் அவரை ராணுவ மருத்துவக் குழுவினர், அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்