முதியவருக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் செய்த விபரீதம் - வெளி வந்த அதிர்ச்சி

x

கர்நாடகாவில் 79 வயது முதியவருடன் தனிமையில் படம் எடுத்து மிரட்டிய ஹனி டிராப் வழக்கில், இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட முதியவரின் மகன் கொடுத்த புகாரில், முதியவரை வீட்டிற்கு வரவைத்த 32 வயதுடைய பெண், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து தனிமையில் படம் எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவை காட்டி 15 லட்ச ரூபாய் கேட்டு முதியவரை பெண் மிரட்டியதாகவும் புகாரளித்துள்ளார். இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த வீடியோ அடங்கிய செல்போனையும் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்