தலைக்கேறிய போதையால் அடாவடி... போதை இளைஞரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் - ஆம்பூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

x

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ஆட்டோ கண்ணாடியை உடைத்து, அலப்பறையில் ஈடுபட்ட போதை இளைஞரை ஆட்டோ ஓட்டுநர் தாக்க முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது. ஆம்பூர் பைபாஸ் சாலையில் நின்ற ஆட்டோவின் கண்ணாடியை மதுபோதையில் இருந்த இளைஞர் அடித்து உடைத்துள்ளார். இதனையடுத்து ஆட்டோ ஓட்டுநருக்கும் போதை ஆசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, கைகலப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்ட நிலையில், அங்கு வந்த போலீசார் இளைஞரைப் பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்