மெரினா கடற்கடையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - ஒரு மாணவர் நீரில் மூழ்கி மாயம்

x

சென்னை மெரினா கடலில் குளிக்க சென்ற மாணவர் கடலில் மூழ்கி மாயமான நிலையில், அவரை மீட்கும் முயற்சியில் உயிர்காக்கும் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 6 இளைஞர்கள் மெரினா கடற்கரையை சுற்றிப் பார்க்க வந்தனர். அப்போது, அவர்கள் கடலில் இறங்கி குளித்த போது, மூன்று இளைஞர்கள் அலையில் இழுத்து செல்லப்பட்டனர். இதில், இரண்டு இளைஞர்களை மெரினா உயிர்காக்கும் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் விரைந்து செயல்பட்டு மீட்டனர். ஆனால், அருண் குமார் என்ற தனியார் கல்லூரி மாணவர் மட்டும் அலையில் சிக்கி மாயமானதால், அவரை தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்