அதிர வைக்கும் சம்பவம்... இளைஞரின் வயிற்றில் இருந்த 56 பிளேடுகள்... அதிர்ந்து போன மருத்துவர்கள்..!வயிற்றுக்குள் பிளேடுகள் போனது எப்படி..?

x

ராஜஸ்தானில் இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து 56 பிளேடுகளை மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உள்ளனர்.

ராஜஸ்தான் ஜலோர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞரான யஷ்பால் சிங், ரத்த வாந்தி எடுத்து கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மருத்துவமனையில் செய்யப்பட்ட பரிசோதனையில் அவரது வயிற்றில் பிளேடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, 7 பேர் கொண்ட மருத்துவ குழுவினர், சுமார் 3 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, இளைஞரின் வயிற்றில் இருந்த அனைத்து பிளேடுகளையும் அகற்றி உள்ளனர். மனச்சோர்வால், பிளாஸ்டிக் கவருடன் 3 பாக்கெட் பிளேடுகளை அந்த இளைஞர் விழுங்கியதாகக் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்