பட்டாக் கத்தியுடன் வந்து பைக்கை திருடும் இளைஞர்கள் - அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்

x

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே பட்டாக்கத்தியுடன் வந்து பைக்கை திருடிச் சென்ற இளைஞர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொத்தேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சுகுமார் என்பவர், வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் வெளியே நிறுத்தி விட்டு உறங்க சென்றுள்ளார். அப்போது, அதிகாலை 3 மணி அளவில் பட்டா கத்திகளுடன் வந்த மூன்று நபர்கள், சுகுமாரின் இரு சக்கர வாகனத்தை கொள்ளையடித்துச் சென்றனர். முன்னதாக அதே தெருவில் உள்ள சாந்தலிங்கம் என்பவரது வீட்டில் இருந்த பைக்கை திருடும் போது ஆட்கள் வந்ததால் அங்கிருந்து தப்பியோடினர்...


Next Story

மேலும் செய்திகள்