கார் மீது மோதிய அரசுப்பேருந்து...காரில் பயணித்த இருவர் படுகாயம் - பரபரப்பு CCTV காட்சி

x

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த பாலசுப்பிரமணியன், தனது மனைவியுடன் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு காரில் திரும்பியுள்ளார். அப்போது ஒழுகைமங்கலம் பகுதியில், சாலை வளைவில் திரும்பும்போது கார் மீது அரசுப்பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்த தம்பதி படுகாயம் அடைந்த நிலையில், இருவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அரசுப்பேருந்து ஓட்டுநர் தப்பிச் சென்ற நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்