செல்போனில் வீடியோ எடுத்தவரை எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற சிவகங்கை நபரால் அதிர்ச்சி

x

கேரள மாநிலம் கோழிக்கோட்டில், ஓடும் ரயிலில் இருந்து தள்ளியதில் சக பயணி உயிரிழந்த சம்பவத்தில், தமிழகத்தை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.கோழிக்கோடு கொய்லாண்டி பகுதி அருகே, மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 25 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர், ஓடும் ரயிலில் இருந்து விழுந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சைப் பலனின்று அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே, இளைஞர் ரயிலில் இருந்து தவறி விழுந்ததாக எண்ணிய நிலையில், சக பயணியிடம் நடந்த வாக்குவாதத்தின்போது ஏற்பட்ட ஆத்திரத்தில், ரயிலில் இருந்து இளைஞர் தள்ளிவிடப்பட்டது தெரியவந்தது. இருவருக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதத்தை, ரயிலில் இருந்த பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த ஆதாரத்தை வைத்து, இளைஞரை ரயிலில் இருந்து தள்ளிவிட்ட சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சோனு முத்து என்பவரை போலீசார் கைது செய்தனர். உயிரிழந்த இளைஞர் குறித்து தகவல் ஏதும் தெரியாததால், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்