ஆசையாய் தயிர் பூரி சாப்பிட்ட கர்ப்பிணிக்கு காத்திருந்த அதிர்ச்சி... சென்னை ஹாட் சிப்ஸ்-ல் பரபரப்பு

x

சென்னை பாண்டி பஜார் பகுதியில் உள்ள ஹாட் சிப்ஸ் கடையில் கொரட்டூரை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி நித்யாவுக்கு அளிக்கப்பட்ட தயிர் பூரியில் கரப்பான் பூச்சி இறந்துகிடந்துள்ளது. இதுகுறித்து கடைமேலாளரிடம் நித்யா குடும்பத்தினர் கேள்வி எழுப்பிய போது, அலட்சியமாக நடந்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக நித்யாவுக்கு வாந்தி ஏற்படவே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பி உள்ளார். இதுகுறித்து நித்யா குடும்பத்தினர் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் அளித்தனர். கடையில் ஆய்வு நடத்திய அதிகாரி, "உணவில் கிடந்தது கரப்பான்பூச்சி இல்லை. மின் விளக்கு ஒளியில் வரும் பூச்சி தான். சமையலறை பகுதி தூய்மையாக பராமரிக்கப்படவில்லை எனவும், சமையல் பொருட்கள் முறையாக மூடி வைக்கவில்லை என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து விதிகளை சரியாக கடைபிடிக்காததால் கடைக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்