பாம்பன் தூக்கு பாலத்தை ஒன்றன்பின் ஒன்றாக கடந்து சென்ற கப்பல்கள்.. பிரம்மிக்க வைக்கும் காட்சிகள்

x

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தூக்கு பாலத்தை கப்பல்கள் மற்றும் படகுகள் அடுத்தடுத்து கடந்து சென்ற காட்சியை, சுற்றுலாப் பயணிகள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். மும்பையில் இருந்து இழுவை கப்பல் காக்கிநாடா செல்வதற்காகவும், கேரளாவில் இருந்து காக்கிநாடா செல்ல மிதவை கப்பலும், பாம்பன் துறைமுகத்திற்கு வந்தன. துறைமுக அதிகாரிகள் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, பாம்பன் தூக்கு பாலம் திறக்கப்பட்டு, கப்பல்கள் காக்கிநாடா நோக்கி சென்றன. அதேபோல், விசைப்படகுகளும் ஒன்றன்பின் ஒன்றாகச் சென்றன. இதனை பாம்பன் பாலத்தில் நின்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டுரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்