சோனியா காந்தியை சந்தித்த சசிதரூர்.. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டி என தகவல்
சோனியா காந்தியை சந்தித்த சசிதரூர்.. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டி என தகவல்
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசிதரூர் போட்டியிட சோனியா காந்தி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல், அக்டோபர் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில்
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சசிதரூர் சந்தித்தார். டெல்லியில் சோனியா காந்தியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட சசிதரூருக்கு சோனியா காந்தி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசிதரூர் போட்டியிடும் பட்சத்தில் அது ராகுல்காந்திக்கு பின்னடைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
Next Story