ஆவிகளோடு பேசும் "ஷாமன்கள்"... மலை உச்சியில் நடந்த அமானுஷ்ய சடங்கு - நடக்கப்போகும் சம்பவங்கள் என்ன ?

x

பெரு நாட்டில் ஷாமன் இனத்தவர் நடத்திய அமானுஷ்ய சடங்குகளில் அதிர்ச்சிகர கணிப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன...

பழங்குடியினர்களான ஷாமன்கள் ஆவிகளோடு பேசும் வல்லமை வாய்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்... அமானுஷ்ய சடங்குகள் செய்வதற்கு பெயர் போன ஷாமன் இனத்தவர் 2023ம் ஆண்டிற்கான கணிப்புகளை வெளியிட்டுள்ளனர்... தலைநகர் லிமாவில் உள்ள சான் கிறிஸ்டோபல் மலையில் கூடிய ஷாமன்கள் நேர்மறை சக்திகளை ஈர்க்கும் வருடாந்திர மாய விழாவை நடத்தினர்... சடங்குகளின் போது, உக்ரைனும் ரஷ்யாவும் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்றும், பிரேசிலிய கால்பந்து ஜாம்பவான் பீலே 2023ல் காலமாக வாய்ப்புள்ளதாகவும் ஷாமன்கள் கணித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்