ஓய்வு பெறப்போகும் சைலேந்திரபாபு... தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்..? - வெளியான புதிய தகவல்

x

டெல்லியில் உள்ள மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நாளை (22.6.23) ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்பு , உள்துறைச் செயலாளர் அமுதா மற்றும் தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர். புதிய டிஜிபிக்கான பரிந்துரை பட்டியல் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. கூட்டத்தின் இறுதியில், மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இறுதி செய்து தமிழ்நாடு அரசிடம் பட்டியலை ஒப்படைக்கும். இதிலிருந்து ஒருவரை தமிழ்நாடு அரசு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வரும் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்