நள்ளிரவில் கைது செய்யப்பட்ட எஸ்.ஜி. சூர்யா - கரு. நாகராஜன் பரபரப்பு குற்றச்சாட்டு

x

பாஜக நிர்வாகி சூர்யாவின் கைது குறித்த மதுரை எம்.பி சு.வெங்கடேசனின் ட்வீடுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார். கைதானது பொய்யா என்றும், விடுதலை செய்ய வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை முன்வைப்பது, பீதியை பரப்புவதா? போன்று ஆகுமா என கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு சமூக பிரச்சனைக்கு நியாயமான தீர்வு காண அனைவரும் முயற்சிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண உழைப்பது நம் கடமை என குறிப்பிட்டுள்ள நிர்மலா சீதாராமன், இந்த உழைப்பிற்கு ஆயுதம் வேறில்லை, கவசம் தேவையில்லை என்பதே உண்மை என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்