"தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்" - நடிகை குஷ்பு பரபரப்பு

x

சொந்த தந்தையாலேயே தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.

அண்மையில் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக பொறுப்பேற்று கொண்ட நடிகை குஷ்பூ,

தனியார் நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், தனது எட்டு வயதில் இருந்தே சொந்த தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். தந்தை குறித்து தாயிடம் சொன்னால் அவர் நம்புவாரா? என்ற தயக்கத்தால் 15 வயது வரை தந்தையின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனக்கு 16 வயதான போது தான் தந்தையின் செயலை கண்டிக்கும் தைரியம் தனக்கு வந்ததாக தெரிவித்துள்ள குஷ்பூ, தனது தந்தையால் தனது தாயும் மிகவும் பாதிக்கப்பட்டதை நினைவு கூர்ந்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்